உள்ளூர் செய்திகள் (District)

ஏற்காட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

ஏற்காட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி

Published On 2023-02-21 07:48 GMT   |   Update On 2023-02-21 07:48 GMT
  • சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, ஏற்காடு ஜெரினாகாடு புது மயானத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து, மேள தாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர். அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், சாமியாடி வந்த பக்தர்களிடம் ஆடு, கோழிகளை கொடுத்தனர்.

அதனை வாங்கிய பக்தர்கள், ஆட்டின் குரல் வளையை கடித்து ரத்தம் குடித்தும், கோழியை வாயில் கவ்வியபடியும் சுடுகாடு நோக்கி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News