உள்ளூர் செய்திகள் (District)

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று டிஸ்சார்ஜ்

Published On 2024-10-02 06:32 GMT   |   Update On 2024-10-02 06:32 GMT
  • அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
  • இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

சென்னை:

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று பள்ளிக் கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் காஞ்சீபுரம், உத்தரமேரூர் பகுதியில் நேற்று பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆய்வுகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது . இதனால் அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நிலை சரியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News