உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் உள்ளார்- மருத்துவமனை தரப்பில் தகவல்

Published On 2023-06-15 03:26 GMT   |   Update On 2023-06-15 03:26 GMT
  • நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.
  • காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை:

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாகவும் உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். காவிரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கட்டாயம் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மணிக்கு மேல் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News