உள்ளூர் செய்திகள் (District)
பஸ்நிலையத்தில் நின்றபோது மாநகராட்சி பஸ்மோதி மூதாட்டி பலி
- ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்து உள்ளார்.
- விபத்து ஏற்படுத்திய அதே பஸ்சில் பச்சையம்மாளை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
ராயபுரம்:
சென்னை, பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 60) இவர் நேற்று காலை ரத்த கொதிப்பு மாத்திரை வாங்குவதற்காக பொன்னியம்மன்மேடு பகுதியில் இருந்து பஸ் மூலம் மின்ட் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் மின்ட் பகுதியில் இருந்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்து உள்ளார்.
அப்போது அங்கு வந்த மாநகர பஸ் (எண்:57) திடீரென பச்சையம்மாள் மீது மோதியது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்து ஏற்படுத்திய அதே பஸ்சில் பச்சையம்மாளை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.