உள்ளூர் செய்திகள்

தரமற்ற தார் சாலை பெயர்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

சூரியாம்பாளையம் பகுதியில்போடப்பட்ட 2 நாட்களில் பெயர்ந்த தார் சாலை

Published On 2023-09-28 07:47 GMT   |   Update On 2023-09-28 07:47 GMT
  • சூரியாம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
  • காலை புதிதாக போட்டப்பட்ட இந்த தார் சாலை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சூரியாம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது.

நேற்று முன்தினம் காலை புதிதாக போட்டப்பட்ட இந்த தார் சாலை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 25-ந் தேதி மாலை சூரியம்பாளையம் பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த மழைக்கே தாக்குப் பிடிக்காமல் தார் சாலை பெயர்ந்து போயுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

இப்பகுதியில் பழைய தார் சாலை திடமாகவும் இருந்தது. ஆனால் புதிய தார்சாலை போடுகிறோம் என்ற பெயரில் 2 நாட்களுக்கு கூட தாக்குபிடிக்காத தரமில்லாத சாலை அமைத்து உள்ளனர்.

பழைய தார் சாலையின் மீது புதிய தார்சாலை அமைக்கும் போது பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன் மீது சிறிய ஜல்லிகளை கொட்டி தார் கலவைகளை மட்டும் போட்டு சாலை அமைத்து விடுகின்றனர். இதனால் தார் சாலைகள் தரமற்றதாக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News