உள்ளூர் செய்திகள் (District)

நாமக்கல் மாணவா் விடுதியில் ஆா்.டி.ஓ. திடீா் ஆய்வு

Published On 2022-07-24 07:56 GMT   |   Update On 2022-07-24 07:56 GMT
  • கலெக்டரும் பகுதிகளில் உள்ள மாணவா் விடுதிகளை நேரடியாகப் பாா்வையிட்டு உணவை சாப்பிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
  • பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு பிற்பட்டோா் நல மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம், நாமகி ரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

விடுதிகளில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் தரமானதாக இல்லை என்ற புகார் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்ட கலெக்டரும் தாம் செல்லும் பகுதிகளில் உள்ள மாணவா் விடுதிகளை நேரடியாகப் பாா்வையிட்டு உணவை சாப்பிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கிடையே நாமக்கல் ஆர்.டி.ஓ. .மஞ்சுளா நாமக்கல் பிற்பட்டோா் நல மாணவா் விடுதிக்கு சென்று உணவு வகைகளைப் பரிசோதித்தார். அதில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறியதுடன், மாணவர்கள் வருகைப் பதிவேட்டையும் அவா் ஆய்வு செய்தார்.

சமீபத்தில் கொல்லிமலை ஒன்றியம் செங்கரை பழங்குடியின மாணவர் விடுதியில் தங்கிப் படித்த நான்கு மாணவர்கள் திடீரென மாயமாகினர். போலீஸாா் அவர்களை திருப்பூர் சென்று மீட்டு வந்தனர்.

அதன் எதிரொலியாக, மாணவ, மாணவிகள் தங்கிப் பயிலும் விடுதிகளில் 

Tags:    

Similar News