உள்ளூர் செய்திகள்

கொசவபட்டியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கொசவபட்டியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு நத்தம் இரா.விசுவநாதன் மரியாதை

Published On 2022-07-21 05:32 GMT   |   Update On 2022-07-21 05:34 GMT
  • கொசவபட்டியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
  • கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்:

அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நத்தம் எம்.எல்.ஏவும், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான இரா.விசுவநாதன் கொசவபட்டியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.வி.என் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராசு, சாணார்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளர் அந்தோணி,

தவசிமடை ஒன்றிய கவுன்சிலர் பஞ்சவர்ணம் கனகராஜ், கூட்டுறவு சங்க தலைவர் ராமையா மற்றும் அறிவழகன்,வளன் அரசு,செல்வ நாயகம், சின்னப்பன், ரமேஷ், அமல்ராஜ், கணேசன், ஜெனி, வீராசாமி,தாஸ், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News