உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டி

Published On 2023-05-14 08:34 GMT   |   Update On 2023-05-14 08:34 GMT
  • கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
  • போட்டியில் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

தென்காசி:

இந்திய வலு தூக்கும் சங்கம் மற்றும் தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுக்கான தேசிய வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வலு தூக்கும் சங்க மாநில தலைவர் ராஜா எம்.எல்.ஏ., மாநில செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் 24 மாநிலங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியானது வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும். நேற்று 53, 59 கிலோ உடல் எடை பிரிவில் நடைபெற்ற போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பரிசுகளை வென்றனர். ஏற்பாடுகளை தேசிய வலுதூக்கும் சங்க செயலாளர் ஜோசப், தேசிய வலுதூக்கும் சங்க தலைவர் சதீஷ்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் சண்முகசுந்தரம், தென்காசி மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முருகன், ரவிக்குமார், குத்தாலிங்கம் சரவணகுமார், ஜோதிமாணிக்கம், ஹிரா அப்துல் ரசாக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News