உள்ளூர் செய்திகள்

 கோவில் பூட்டு உடைக்கப்பட்டும், உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் படத்தில் காணலாம்.

பாப்பாரப்பட்டி அருகே கோவில் சிலை திருட்டு

Published On 2022-07-25 09:27 GMT   |   Update On 2022-07-25 09:27 GMT
  • உண்டியல் உடைக்கப்பட்டும், சாமி சிலை மற்றும் வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மலையூர் கிராமத்தில் கோபால்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பூஜை செய்வது வழக்கம்.

நேற்று பூஜை செய்து விட்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இன்றுகாலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்து பார்த்தார்.

அப்போது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தார். உண்டியல் உடைக்கப்பட்டும், சாமி சிலை மற்றும் வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News