உள்ளூர் செய்திகள்
ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்
- தொடக்க விழாவில் கேரளா பிரில்லியன்ட் அகடமி, நெல்லை பயிற்சி மையத்திலிருந்து லமிஸ் நசீம் தாவரவியல் வல்லுனர், சஹானாஸ் வேதியல் வல்லுனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி நீட் தேர்விற்கு எவ்வாறு தயாராவது, பெற்றோர்களின் பங்களிப்பு பற்றி விளக்கினார்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 9, 10 மற்றும் 11 -ம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவில் கேரளா பிரில்லியன்ட் அகடமி, நெல்லை பயிற்சி மையத்திலிருந்து லமிஸ் நசீம் தாவரவியல் வல்லுனர், சஹானாஸ் வேதியல் வல்லுனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி நீட் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், தேர்விற்கு எவ்வாறு தயாராவது, பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கினார். பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மற்றும் அகாடமி வல்லுனர்கள் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள்,மாணவர்களிடம் ஏற்படுத்தினர்.