உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

Published On 2023-04-08 09:38 GMT   |   Update On 2023-04-08 09:38 GMT
  • சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
  • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை கள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசாவை சேர்ந்த தனபதான் (வயது28) என்பதும், அன்னூர் அருகே கணேசபுரத்தில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.மேலும் இவர் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து கள்ளிபாளையம் பகுதியில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News