உள்ளூர் செய்திகள் (District)

மாணவிகளுக்கு அதிகாரிகள் அறிவுறை கூறிய காட்சி.

பண்ருட்டியில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களை எச்சரித்த அதிகாரிகள்

Published On 2023-11-30 07:26 GMT   |   Update On 2023-11-30 07:26 GMT
  • மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
  • தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

கடலூர்:

பண்ருட்டியில் இருந்து சேந்த நாடு செல்லும் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செட்டிபாளையம், தட்டாஞ்சாவடி பகுதி சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிபடி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, யாராவது பஸ்சில் தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடமும், பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News