உள்ளூர் செய்திகள்

பைக் மோதி முதியவர் சாவு

Published On 2023-04-13 10:12 GMT   |   Update On 2023-04-13 10:12 GMT
  • அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ெதாகரபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது80). இவர் நேற்று அப்பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News