உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே முதியவர் நீரில் மூழ்கி பலி
- செல்லையா அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
- சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று செல்லையா உடலை மீட்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பெரியகுளத்தில் கருமடையூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா (வயது80). இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து பொதுமக்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.