உள்ளூர் செய்திகள்
- காலை கோவிலுக்கு செல்வதற்காக சேவூர் சாலையை கடக்க முயன்றார்.
- தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாரப்ப கவுண்டர் சம்பவ இடத்திலேயே பலியானார்
அவினாசி :
அவினாசி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர் (வயது 77). இவர் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்காக சேவூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாரப்ப கவுண்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.