உள்ளூர் செய்திகள் (District)
- நெத்திமேடு பழைய இரும்புக் கடை அருகில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
- வண்டி தானாக நிலை தடுமாறியதை தொடர்ந்து சாலையில் சறுக்கி விழுந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு, சாய்ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 62). இவர் துணிகளுக்கான எம்ப்ராய்டரி தொழில் செய்து வருகிறார். இவர் நெத்திமேடு பழைய இரும்புக் கடை அருகில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வண்டி தானாக நிலை தடுமாறியதை தொடர்ந்து சாலையில் சறுக்கி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.