உள்ளூர் செய்திகள்

போலீசாரை பார்த்ததும் சூதாடிய 10 பேர் தப்பி ஓட்டம்

Published On 2023-04-02 08:27 GMT   |   Update On 2023-04-02 08:27 GMT
  • இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
  • 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

சிதம்பரம் அடுத்த பி. முட்லூர் பகுதியில் ஒரு கும்பல் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பரங்கி ப்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பல் தங்களது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு அனைவரும் தப்பித்து ஓடினார்கள்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது யாரும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 10 மோட்டார் சைக்கிள், 13 ஆயிரத்து 230 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News