உள்ளூர் செய்திகள் (District)

ஆன்லைன் வர்த்தகம்: பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வணிகர்கள் முடிவு-விக்கிரமராஜா

Published On 2024-09-30 05:36 GMT   |   Update On 2024-09-30 05:36 GMT
  • ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை.

புதுக்கோட்டை:

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மின்கட்டண உயர்வு, சொத்து வரி, தொழில் வரி, கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வடநாட்டு தொழிலாளர்களை நம்பி தான் வணிகர்கள் உள்ளனர். அவர்கள் வரும்போது பான் மசாலா, குட்கா ஆகியவற்றோடு தான் வருகிறார்கள். இதனை தமிழகத்திற்குள் வரும் போதே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகம் இனியும் தொடருமானால் 10 கோடி வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். விரைவில் பிரதமரை சந்திக்க உள்ளோம்

இதேபோல் தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வு சொத்து வரி கட்டிட வரைபட கட்டண உயர்வு தொழில் வரி ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்து உள்ளோம்.

வணிக வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில தவறான அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு லஞ்சம் பெறுவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News