ஊட்டி நகர பாக நிலை முகவர்கள் கூட்டம்
- நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊட்டி நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமையில் நடைபெற்றது.
- முடிவில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜா நன்றி கூறினார்.
ஊட்டி,
ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊட்டி நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமையில் நடைபெற்றது. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார்.
நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.ஊட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, சத்தக்கத்துல்லா, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர துணை செயலாளர்கள் இச்சுபாய், ரீட்டாமேரி, கிருஷ்ணன், பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக், தம்பி இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, துணை அமைப்பாளர்கள் நாகராஜ், மேத்யூஸ், ஜெயராம், ஆட்டோ ராஜன், தியாகு, மார்க்கெட் ரவி, அமலநாதன், சசிகுமார், வில்லியம், சித்திக், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்ணு, செல்வராஜ், மேரி பிளோரினா, பிரியா வினோதினி, திவ்யா, மீனா உட்பட கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக முன்னணியினர் திரளாக கலந்துகொண்டனர்.முடிவில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜா நன்றி கூறினார்.