உள்ளூர் செய்திகள் (District)
- கொடியேற்று விழா மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
- நீர் மோர், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் சார்பில் பேருந்து நிறுத்தத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி அ.தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் கொடியினை ஏற்றி நீர் மோர், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர், மேற்கு ஒன்றிய செயலாளர், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.