உள்ளூர் செய்திகள் (District)
அரூர் பஸ் நிலையத்தில் 2-வது நாளாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
- தீபாவளி பண்டிகையொட்டி விடுமுறைக்கு வந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்பவர்களின் கூட்டம் அரூர் பஸ் நிலையத்தில் 2-வது நாளாக நேற்று அதிகமாக காணப்பட்டது.
- வெளியூர்களுக்கு செல்லும் மக்களால் அரூரில் தற்காலிக பஸ் நிலையத்தில் இரவு, பகல் என மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அரூர்:
நாடு முழுவதும் கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி அரசு சார்பில் நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது. ஒரு சில நிறுவனங்கள் செவ்வாய்கிழமை வரையும் விடுமுறை அளித்தது.
இதனையடுத்து சொந்த ஊர் திரும்பிய மக்கள் கொண்டாட்டங்கள் முடிவடைந்து அவரவர் பணியிடங்களுக்கு படிப்பதற்கும் ஊர் திரும்பும் மக்களால் நேற்று வரை பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
அரூர் பஸ் நிலையத்தில் சேலம், கோயமுத்தூர், சென்னை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களால் அரூரில் தற்காலிக பஸ் நிலையத்தில் இரவு, பகல் என மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று இரவு வரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.