உள்ளூர் செய்திகள்
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்.
- குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிப்பு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர்
சிவக்குமார் உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், வாகனத்துக்கு உரிய காப்பீடு இல்லாதவர்கள் அதிவேகமாக செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள் என கண்டறிந்து.
அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி நகர்பகுதியில் 30 வாகனங்களுக்கு தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000, லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டுவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்கள் என ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.