உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்

Published On 2022-12-13 07:23 GMT   |   Update On 2022-12-13 07:23 GMT
  • சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்' நாளை நடைபெற உள்ளது.
  • மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் அடையுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்' நாளை (14-ந்தேதி) 11.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1-ல் நடைபெற உள்ளது.

எனவே மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் வந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் அடையுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News