உள்ளூர் செய்திகள் (District)
பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயம்
- தனியார் பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
- இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் 2 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று முன்தினம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள், டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.