உள்ளூர் செய்திகள் (District)

பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயம்

Published On 2023-03-01 10:22 GMT   |   Update On 2023-03-01 10:22 GMT
  • தனியார் பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
  • இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் 2 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று முன்தினம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள், டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News