உள்ளூர் செய்திகள் (District)
வேப்பந்தட்ையில் வீட்டின் மேற்கூறை விழுந்து 4 பேர் காயம்
- வேப்பந்தட்ையில் வீட்டின் மேற்கூறை விழுந்து 4 பேர் காயம் அடைந்தனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது41). விவசாயியான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது மனைவி காமாட்சி, உறவினர்கள் அரசலூரை சேர்ந்த கண்ணன், சங்கர் ஆகிய 4 பேரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சி திடீரென உதிர்ந்து கீேழ விழுந்தது. அதில் 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.