உள்ளூர் செய்திகள்

பள்ளி கழிவறையில் ஆபாச படம் எடுத்த வாலிபர்

Published On 2022-08-04 09:33 GMT   |   Update On 2022-08-04 09:33 GMT
  • பள்ளி கழிவறையில் ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்
  • தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு செல்வார்கள்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நன்னை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவியர்களுக்கு கழிப்பறை இல்லாததால் தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு செல்வார்கள். நேற்று மாணவிகள் சென்ற போது அங்கு மறைந்திருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் வாலிபரை விரட்டி பிடித்து தாக்கி போலீச்சுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் வருவதற்குள் அந்த வாலிபர் அவர்கள் பிடியில் இருந்து தப்பிவிட்டார். குன்னம் சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தியதில் தப்பிய வாலிபர் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரிபேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான மணிகண்டனை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News