- ரத்த தான முகாம் நடந்தது
- அஸ்வின்ஸ் குழுமம் சார்பில்
பெரம்பலூர்
பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரி மற்றும் ரெஸ்டாரெண்ட்ஸ் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ரத்ததான முகாம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி 10 வது ஆண்டாக ரத்ததான முகாம் அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் நடந்தது.
அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை வகித்து ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். முகாமிற்கு அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர் அஸ்வின் முன்னிலை வகித்தார். முத்து ரத்த வங்கி நிர்வாகி வீரமுத்து, டாக்டர்கள் வெங்கட்ரமணண், பிரகாஷ்ஆகியோர் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் செவிலியர் குழுவினர் ரத்தம் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் அஸ்வின்ஸ் குழுமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் வழங்கிய வர்ளுக்கு ஊட்டச்சத்து பொருட்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் குழும மேலாளர்கள் சூரி வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.