உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ்-புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

Published On 2022-11-08 09:36 GMT   |   Update On 2022-11-08 09:36 GMT
  • கிறிஸ்துமஸ்-புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது
  • பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில்

பெரம்பலூர் :

பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்குவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்புக்காக செர்ரி, உலர் திராட்சை, பேரிச்சை, வெள்ளிரி விதை, ஆரஞ்சு, முந்திரி, திராட்சை, உலர் வண்ணநிற பழங்கள், ஆப்ரிகாட், டியூட்டி புரூட்டிச் ஆகிய பழங்கள், ஜாதிக்காய் பொடி, அத்திப்பழம், லவங்கப் பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து, சுமார் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஒயினில் ஊற வைக்கப்படுகிறது. இவை நன்றாக ஊறிய பிறகு சுவையான, தரமான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்படுகிறது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள ரிச் பிளம் கேக் தயாரிப்பு பணி முடிவடைந்து, பின்னர் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கைக்காக ரிச் பிளம் கேக் மற்றும் வகை வகையான கேக்குகள் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக், குக்கீஸ், சாக்லெட் ஆகியவை தயாராகி வருகிறது.

தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் இந்த கேக் வகைகள் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். அப்போது அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் அஸ்வின்ஸ், மனித வள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News