உள்ளூர் செய்திகள் (District)

அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை-போக்குவரத்து இடையூறாக போர்டு வைக்க கூடாது

Published On 2023-04-24 08:39 GMT   |   Update On 2023-04-24 08:39 GMT
  • போக்குவரத்து இடையூறாக போர்டு வைக்க கூடாது என அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்
  • முக்கிய நிகழ்விற்காக வைக்கப்படும் பதாகைகளை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்குள் எடுத்துவிட வேண்டும்.

பெரம்பலூர்:

பெரம்பலூரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின் பேரில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசியல் கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் அதிக பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய நிகழ்விற்காக வைக்கப்படும் பதாகைகளை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்குள் எடுத்துவிட வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News