உள்ளூர் செய்திகள் (District)

ஒகளூர் ஊராட்சியில் இலவச தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-02-17 07:16 GMT   |   Update On 2023-02-17 07:16 GMT
  • ஒகளூர் ஊராட்சியில் இலவச தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
  • ஒகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து ஒகளூர் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் குணசேகரன் மற்றும் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் அரசு பள்ளி மாணவர்களிடையே வெறிநோய் நோயின் தன்மை குறித்தும் விழிப்புணர்வு பற்றிய விளக்க உரையும் ஆற்றினர். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் அண்ணாதுரை, ஆவின் பால் பண்ணை செக்ரட்டரி சக்திவேல், அரசு பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் ஒகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. முன்னதாக ஒகளூர் அரசுப்பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கால்நடை உதவி மருத்துவ கோட்டை செயலாளர் மருத்துவர் இராமகிருஷ்ணன், கால்நடை உதவி மருத்துவர்கள் சத்தியசீலன், பரத், கால்நடை ஆய்வாளர் பிரேமா மற்றும் உதவியாளர்கள் சின்னதுரை, ராஜசேகரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் கல்பனா ஏற்பாடு செய்திருந்தார்.


Tags:    

Similar News