உள்ளூர் செய்திகள்

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-07-20 08:40 GMT   |   Update On 2023-07-20 08:40 GMT
  • படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
  • ஆகஸ்ட் 31ம்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுரை

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் படித்த வேலை வா ய்ப்பற்ற இளைஞ ர்களிடமி ருந்து வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெ றுவதற்கான வி ண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தோல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து ஐந்தா ண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி கா த்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவி த்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறு த்தவரையில் வே லைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடி த்திருந்தால் போது மானது.உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் விண்ண ப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றா ண்டுகள் உதவி த்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையி ல்லை.பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை அடுத்த மாதம் ஆகஸ்ட்டு 31-ந் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் நேரில் சமர்ப்பி க்கலாம் என்று கலெக்டர் தெரிவி த்துள்ளார்.

Tags:    

Similar News