உள்ளூர் செய்திகள் (District)

புலியூர் திருப்பதியில் கும்பாபிஷேக விழா

Published On 2023-03-28 06:54 GMT   |   Update On 2023-03-28 06:54 GMT
  • யாகசாலை பூஜை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள புலியூர் திருப்பதியான ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 25-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் கும்பகோணம் திவ்யதேச தலமான சாரநாதசுவாமி பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ராமன்பட்டர் மற்றும் புலியூர் திருப்பதி கோவில் ஸ்தானீகர் டி.என்.கோபாலன் அய்யங்கார், வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் பட்டாச்சாரியர் குழுவினர் மகா சாந்திஹோமம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. . திராவிட வேதமும், சதுர்வேத மந்திரங்களும் முழங்க ராஜகோபுரம், மூலவர் தாயார் சன்னதி கோபுர கலசங்களில் பட்டர்கள் புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News