உள்ளூர் செய்திகள் (District)
- சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் இன்று நடந்தது
- அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடந்தது
பெரம்பலூர்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அரசின் பல்வேறு துறைகள் இணைந்து சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்திடும் வகையில் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பற்றி அந்தந்த துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டு விரிவாக எடுத்து விளக்கும் விதமாக கண்காட்சியும் நடைபெற்றது.