உள்ளூர் செய்திகள் (District)

எல்.ஐ.சி முகவர்கள் கோரிக்கை மனு

Published On 2022-11-12 09:52 GMT   |   Update On 2022-11-12 09:52 GMT
  • எல்.ஐ.சி முகவர்கள் கோரிக்கை மனு
  • கலெக்டரிடம் அளித்தனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் கிளை எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எல்ஐசி முகவருக்கான கமிஷன் தொகையை குறைக்க கூடாது, பாலிசிதாரர்கள் பெரும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனு அளிப்பின்போது, கோட்ட இணை செயலாளர் முருகானந்தம், சங்க தலைவர் சுத்தாங்காத்து, செயலாளர் செந்தில்குமார், பொரு ளாளர் கருப்பை யா, துணைத்தலைவர் ஆசைதம்பி, ஆலோ சனைக்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News