உள்ளூர் செய்திகள்

பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா

Published On 2022-10-09 09:21 GMT   |   Update On 2022-10-09 09:21 GMT
  • பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா நடந்தது
  • அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு வரதராஜ கம்பபெருமாள் கோவிலில் திருவீதி உலா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News