உள்ளூர் செய்திகள் (District)

தார் சாலை அமைக்க கோரி மனு

Published On 2022-11-15 10:00 GMT   |   Update On 2022-11-15 10:00 GMT
  • தார் சாலை அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
  • மண் பாதை சேதமடைந்து மோசமாக காட்சியளிக்கிறது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராம ஊராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட புதுப்பட்டி காட்டுக்கொட்டைகையை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயிகளில் 60 பேர் தங்களது விவசாய நிலங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் தொண்டமாந்துறை-விஜயபுரம் சாலையின் அருகே உள்ள அரசமர பிரிவு சாலையில் இருந்து பச்சைமலை நோக்கி செல்லும் பெரியசாமி கோவில் வரை 2 கிலோ மீட்டர் தூரமுள்ள மண் பாதை சேதமடைந்து மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

Similar News