உள்ளூர் செய்திகள்

பாடாலூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-02-08 09:53 GMT   |   Update On 2023-02-08 09:53 GMT
  • பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • இந்த தகவலை சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:


பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News