உள்ளூர் செய்திகள்

கை.களத்தூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Published On 2023-05-13 06:27 GMT   |   Update On 2023-05-13 06:27 GMT
  • கை.களத்தூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News