உள்ளூர் செய்திகள் (District)

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Published On 2023-08-31 06:17 GMT   |   Update On 2023-08-31 06:17 GMT
  • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் என்ஜினீயரிங் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது
  • மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் பங்கேற்பு

பெரம்பலூர்,

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தொழில் துறை தேவைகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக சீனிவாசன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசெஸ் கலந்து கொண்டார். தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள், தொழில் துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் பயனாளர்களுக்கு வழங்கும் சலுகைகள், மானியங்கள் போன்றவற்றை பற்றி அவர் எடுத்துரைத்தார்

ஜென் கேர் அகாடெமி தலைமை செயல்பாட்டு அதிகாரி கவுசியா சித்திக், கல்லூரி முதல்வர் இளங்கோவன் உட்பட பலர் பேசினர்.

இதில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், டீன்கள் அன்பரசன், சிவராமன் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா வரவேற்றார். முடிவில் பேராசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News