பெரம்பலூரில் சிவலிங்கேஸ்வர வழிபாடு
- எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வழிபாடு நடைபெற்றது
- மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை கோவிலில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலி ங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் காக ன்னை ஈஸ்வரர் கோவில் மற்றும் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவா மிகள் மணிமண்டபத்திலும் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி நடந்த சிறப்பு வழிப்பாட்டில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து, உலக மக்கள் நன்மைக்காக தொடர்ந்து நடைபெற்ற கோமாதா பூஜையில் கலந்து கொண்டா ர். பின்னர் அன்னதான தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மகா சித்த ர்கள் டிரஸ்ட் இணை நிறுவ னர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் காமாட்சிபுரி ஆதீன த்தின் மெய்யன்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.