உள்ளூர் செய்திகள்

சமூக நல்லிணக்க விழா

Published On 2023-04-18 07:07 GMT   |   Update On 2023-04-18 07:07 GMT
  • ரோவர் கல்விநிறுவனத்தில் நடைபெற்றது
  • மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

பெரம்பலூர்,

பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் இப்தார் ரமலான் நோன்பு பெருவிழா மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. விழாவிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான் அசோக்வரதராஜன், மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தாவூதி, மாவட்ட ஐக்கிய ஜமாத்பேரவை தலைவர் சுல்தான் இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், புதுக்கோட்டை பேராசிரியர் சதக்கத்துல்லா தாவூதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர் ரமலான் பண்டிகையையொட்டி நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ரோவர் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராசு வரவேற்றார். முடிவில் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளி முதல்வர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News