உள்ளூர் செய்திகள் (District)

வாகனம் மோதி புள்ளி மான் பலி

Published On 2023-04-21 06:41 GMT   |   Update On 2023-04-21 06:41 GMT
  • வாகனம் மோதி புள்ளி மான் பலியானது
  • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர்.

பெரம்பலூர:

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே நெடுவாசல் பிரிவு சாலையை தாண்டி நேற்று அதிகாலையில் புள்ளி மான் ஒன்று பலத்த காயங்களுடன் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர். சாலையை கடக்கும் போது வாகனம் மோதி மான் இறந்துள்ளது. மேலும் அதன் உடல் மீது சில வாகனங்கள் ஏறி சென்றதால் உடல் சிதைந்து விட்டது. உயிரிழந்தது பெண் மான் என்றும், 3 வயது இருக்கும் என்றும், வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News