உள்ளூர் செய்திகள் (District)

கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பலி

Published On 2023-05-06 07:56 GMT   |   Update On 2023-05-06 07:56 GMT
  • கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பலியானார்
  • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்புமணி (வயது 55). இவர் தண்ணீர் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி டிரைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி செல்வியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் செல்வி, அன்புமணியை பல்வேறு இடங்களில் தேடினார். இந்நிலையில் சிறுவாச்சூர் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வயலில் லாரிக்கு தண்ணீர் ஏற்றும் குழாயை எடுத்தபோது அன்புமணி கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக செல்விக்கு இரவில் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த அன்புமணியை தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து அன்புமணியை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அன்புமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News