உள்ளூர் செய்திகள் (District)

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2023-10-06 09:17 GMT   |   Update On 2023-10-06 09:17 GMT
  • தொழிலாளி பலி
  • மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

பெரம்பலூர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் லிங்கமுத்து. இவருடைய மகன் விவேக் (வயது 32), தொழிலாளி. இவர் சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக நாமக்கல் மாவட்டத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள தேவையூர் கிராமத்திற்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் வந்தார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Tags:    

Similar News