பா.ம.க. கவுன்சிலரின் மனைவி கருகி சாவு
- ஆடையில் தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் பரவியது.
- இன்று அதிகாலை வரும் வழியிலேயே காளியம்மாள் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள ஆல்ரபட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ரமேஷ் அப்பகுதி கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
இவரது மனைவி காளியம்மாள் (வயது 35). சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டில் அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் பரவியது.
காளியம்மாளின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு காளியம்மாளின் உடல் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து மீண்டும் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்க அழைத்து வந்தனர். இன்று அதிகாலை வரும் வழியிலேயே காளியம்மாள் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இறந்து போன காளியம்மளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.