உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் பொங்கல் விழா

Published On 2023-01-14 09:04 GMT   |   Update On 2023-01-14 09:04 GMT
  • கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  • ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்து விளக்கேற்றினார். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசும் போது அனைவரும் பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகளை பின்பற்றி, இயற்கையை பாதுகாத்து இனிய வாழ்க்கை வாழ வேண்டும். நிலம், நீர், காற்று மாசுபடுவதை தவிர்த்து நமது முன்னோர்களின் தொன்மைகளை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும் என வாழ்த்தினார்.

விழாவையொட்டி மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம் ஆகியவை நடத்தப்பட்டது. மேலும் மாணவர்கள், பேராசிரியர்களின் தனி திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

Tags:    

Similar News