உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்றவருக்கு யூனியன் சேர்மன் ஜனகர் பரிசுகளை வழங்கிய போது எடுத்த படம்.

குரும்பூர் அருகே பொங்கல் விழா விளையாட்டு போட்டி

Published On 2023-01-17 08:20 GMT   |   Update On 2023-01-17 08:20 GMT
  • கோட்டார்விளையில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.
  • ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர்,வக்கீல் பாக்யராஜ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

குரும்பூர்:

குரும்பூர் அருகே உள்ள கோட்டார்விளையில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவர்கள், பெண்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு வக்கீல் பாக்யராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

இந்த விழாவில் குரும்பூர் தி.மு.க. நகர செயலாளர் பாலம் ராஜன், ஊர் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கோட்டார்விளை நாடார் இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News