உள்ளூர் செய்திகள் (District)

பொன்னேரி அருகே மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது

Published On 2024-08-11 11:14 GMT   |   Update On 2024-08-11 11:14 GMT
  • மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் வில்வ மணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னேரி அடுத்த கோளூர் சுடுகாட்டு முட்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற கோளூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News