உள்ளூர் செய்திகள் (District)

பொன்னேரி அருகே நாளை மின்தடை

Published On 2024-07-10 07:45 GMT   |   Update On 2024-07-10 07:45 GMT
  • துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
  • அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (11-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையடுத்து துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அழிஞ்சிவாக்கம் ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர். ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை,கணேஷ் நகர், சாய் கிருப நகர், சங்கீதா ஓட்டல், சித்தி விநாயகர், பண்ணை ஸ்ரீநகர் விஷ்ணு பவன், மாதவராவ் பெட்ரோல் பங்க், இருளிப்பட்டு எம்.கே. கார்டன், அத்திப்பட்டு விருந்தாவனம் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News