உள்ளூர் செய்திகள் (District)

தபால் குறை தீர்க்கும் முகாம்

Published On 2023-03-16 09:34 GMT   |   Update On 2023-03-16 09:34 GMT
  • சேலம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
  • வாடிக்கையாளர்கள் தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை வருகிற 22-ந்தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.

சேலம்:

சேலம் கிழக்கு கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் கிழக்கு கோட்ட அளவில் தபால் குறித்த குறை தீர்க்கும் கூட்டம், சேலம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. வாடிக்கையாளர்கள் தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை வருகிற 22-ந்தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.

மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் என்றால், அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவலக பெயர் அனைத்தும் இடம் பெற்று இருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது தபால் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால், கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News